சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிரதமரின் பயம் தான் காரணம்... ராகுல்காந்தி சரமாரி புகார்!
பயத்தால் தான் பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பீஹார் சென்றுள்ளார். மிதிலா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தொடர்ந்து வலியுறுத்தியதாகவும், மக்களிடம் இருந்து எதிர்வினை ஏற்படும் என பயந்து பிரதமர் மோடி, ஏற்றுக்கொண்டார் என்றும் கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அம்பானி, அதானி மற்றும் அவர்களைப் போன்றவர்களின் நலன்களுக்கு சேவை செய்கிறது என்பது தான் உண்மை என கூறிய ராகுல்காந்தி, தற்போதைய சிஸ்டம் மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தினரின் நலனுக்காக செயல்படுகிறது என்றும் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசாங்கம் உள்ளிட்டவைகளில் எந்தப் பங்கும் இல்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பீஹாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்..! நிதீஷ் குமாருக்கு அவ்வளவு பயமா? உசுப்பேற்றிய ராகுல்..!
சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து மறுத்து வந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் ஒப்புக்கொண்டது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: ராமர் குறித்த சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு வந்த புதிய சிக்கல்!!