×
 

அமெரிக்க விவசாயத்துறை இந்திய விவசாயிகளை நசுக்கும்...! ராகுல் காந்தி எச்சரிக்கை..!

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அவையில் இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பினார். பொருளாதார ஆய்வு அறிக்கையில் இடம் பெற்றுள்ள இரண்டு அம்சங்கள் குறித்து பேசுவதற்கு தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். போர்க்காலம் இன்னும் முடியவில்லை என்றும் போர் உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

போர் சூழல் ஓய்ந்து விட்டதாக பிரதமர் மோடி கூறுவது தவறானது என்றும் குறிப்பிட்டு பேசினார். அமெரிக்காவின் ஆதிக்கத்தை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கட்டுப்படுத்தி வருவதாக ராகுல் காந்தி மக்களவையில் குறிப்பிட்டுள்ளார். நம் நாட்டின் விவசாயிகளை நசுக்குவதற்கான கதவுகளை அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி திறந்து விட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கும், ட்ரம்புக்கும் பயப்படாத மோடி ராகுலுக்கு பயப்படுவாரா? முதல்வருக்கு தமிழிசை பதிலடி..!

அமெரிக்காவில் உள்ள விவசாயிகளின் நலன் முக்கியம் என அந்நாடு கருதுவது போல் நாமும் நினைக்க வேண்டாமா என்று கேட்டுள்ளார். எந்திரமாக்கப்பட்ட அமெரிக்காவின் விவசாயத்துறை இந்திய விவசாயிகளை நசுக்கப் போகிறது என்றும் எச்சரிக்கை விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் செயல் நமது நாட்டின் விவசாயிகளை அவமானப்படுத்தக்கூடியது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: பாஜக அதிகாரத்துக்கு எங்கள் குரல் அடிபணியாது..! சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி சு. வெங்கடேசன் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share