×
 

பயமுறுத்தும் பேய் மழை..! 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்காக மாறியது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி,கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவை, நீலகிரிக்கு அதீத கனமழை எச்சரிக்கை! அவசியமின்றி வெளியே போகாதீங்க மக்களே!

மேலும், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, பெரம்பலூர், அரியலூர், குமரியில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜில் அப்டேட்! அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கும் மழை... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share