முதலுக்கே மோசம்.. அதிமுக மனுக்களை ஏற்க கூடாது.. தேர்தல் அதிகாரிகளிடம் கடும் வாதம்!!
அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை ஏற்கக் கூடாது என்று தேர்தல் அதிகாரிகளிடம் வாதிடப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளது. மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக சார்பில் வில்சன், சல்மா,சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மையம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மையம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதனை அடுத்து திமுக வேட்பாளர்கள் மூன்று பேருடன் கமல்ஹாசனும் சேர்ந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: வார்த்தையை விட்ட அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு டிரைக்ட் வார்னிங்.. ஆடிப்போன அதிமுக தலைகள்..!
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 13 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் மூன்று வேட்பாளர்களும், மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் ஒரு வேட்பாளரும், அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்கள் ஏழு பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படும் நிலையில் அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை ஏற்க கூடாது என வாக்குவாதம் செய்யப்பட்டது. அதிமுகவில் இருந்த புகழேந்தி என்பவர் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் வேட்பாளர்களின் மனுக்களை ஏற்க கூடாது என்று வாதிட்டார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மறைந்தும் வாழப் போகிறார் குணசேகரன்.. குடும்பத்தினரின் நெகிழ வைக்கும் செயல்!!