×
 

மாமான்னு சொன்னப்பவே, நான் ஏம்மா-னு கேட்டேன்! சௌமியாவை பந்தாடிய ராமதாஸ்..!

தன் பேச்சைக் கேட்காமல் சௌமியாவை தர்மபுரியில் வேட்பாளராக நிறுத்தியதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

முகுந்தனுக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்ட போது தொடங்கிய மோதல் இன்று வரை அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே நிலவி வருகிறது. இந்த நிலையில் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

அப்போது, அன்புமணி கட்சியை சரியாக வழி நடத்தவில்லை என்றும் பாலு சரியில்லை என்பதால் தான் சமூக நீதிப் பேரவை தலைவரை மாற்றினோம் எனவும் விளக்கம் அளித்தார். தலைவராக இருந்த அன்புமணியை யாரும் பார்க்க முடியாது., யாரிடமும் பேச மாட்டார் என்றும் அன்புமணி செயல்பாடு காரணமாகவே தலைவர் பதவியை நான் கையில் எடுத்ததாகவும் கூறினார். தேவையற்ற பொய்களை கூறி அன்புமணி மாவட்ட செயலாளர்களை மிரட்டியதாகவும், அன்புமணியின் மூன்றாண்டு பதவி காலம் முடிந்துவிட்ட நிலையில் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் தனக்கே உள்ளது என்றும் கூறினார். 

இதையும் படிங்க: என்னை நடைப்பிணமாக்கி என் பெயரில் நடை பயணம்! எல்லாமே நாடகம்... மனம் நொந்து பேசிய ராமதாஸ்!

தானே பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் எனக் கூறிய ராமதாஸ், வாக்களிக்கும் மக்கள் தன் பக்கம் உள்ளதாகவும் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தானே முடிவு செய்வேன் எனவும் கூறினார். பாமகவின் செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றுக் கொண்டால் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அன்புமணியே ஒருபோதும் கட்சியிலிருந்து நீக்க மாட்டேன் என்றும் கூறினார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்திடம் தான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

தன் பேச்சுக்கு மாறாக தர்மபுரியில் சௌமியா அன்புமணியை வேட்பாளராக அறிவித்தார்கள் என்றும் தான் கூறியதை சௌமியா கேட்டதில்லை எனவும் தெரிவித்தார். கெஞ்சி கூத்தாடி சௌமியாவை வேட்பாளராக நிறுத்தியதாகவும் அவர் கூறினார். பாமக பொதுச்செயலாளர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று கூறிய அவர், சௌமியா மாமா என்றார்., நான் அப்போதே இது ஏம்மா என்றேன் என பேசினார்.

இதையும் படிங்க: பாமகவிலிருந்து என்னை கழுத்தை பிடிச்சு தள்ளிட்டாங்க! அசிங்கமா இருக்கு... மனவேதனையில் ராமதாஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share