×
 

6 மாவட்ட செயலாளர்கள் கூண்டோடு மாற்றம் - அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ராமதாஸ்...!

பாமகவில் இருந்து 6 மாவட்ட நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி நிறுவனர் ராமதாஸ் உத்தரவு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சிறப்புப் பொதுக் குழுவில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமிக்க, அதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததில் தொடங்கிய பிரச்சனை இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இதனிடையே முகுந்தன் தனது பதவியை ராஜினாமாவே செய்துவிட்டார். ஆனால் பாமகவில் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் என்பது முற்று பெறவில்லை. தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீருபூத்த நெருப்பாக இருவருக்கு இடையேயான மோதல் தொடர்கிறது என்பதைத்தான் இன்று காலை முதல் நடைபெறக்கூடிய சம்பவங்கள் உணர்த்துகின்றன தொடர்ச்சியாக கட்சியில் இருக்கக்கூடிய பல்வேறு நிர்வாகிகளை நீக்கம் செய்து பாமக  நிறுவனர் தலைவர் ராமதாஸ் உத்தரவிட்டிருக்கிறார்.

ஏற்கனவே கிட்டத்தட்ட ஒரு 30க்கும் அதிகமான மாவட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி இருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக பல நிர்வாகிகள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பாமகவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாகியாக பார்க்கப்படக்கூடிய வழக்கறிஞர் பாலு முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 

சற்று நேரத்திற்கு முன்பு பாமகவில் நீண்ட காலமாக பயணித்து வரும் கே.பாலுவை பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் மீள்வதற்குள்ளாகவே 6 மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். 

 

இதையும் படிங்க: கட்சிப் பணியில் தீவிரம் காட்டும் அன்புமணி.. வரும் 15ம் தேதி முதல் பொதுக்குழு கூட்டம்..!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளராக மனோகரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், திருச்சி மேற்கு மாவட்ட செயலாளராக சுந்தரம், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளராக ஞானவேலு,  ஈரோடு மாநகர் மாவட்ட தலைவராக பரமேஸ்வரன், ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவராக குப்புசாமி, திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் ஆக ஹரி கிருஷ்ணன், நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளராக மனோஜ் குமார்,  நாமக்கல் மத்திய மாவட்ட தலைவராக பிரதாப், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவராக முருகேசன், திருச்சி புறநகர் மாவட்ட ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: பாமகவில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்... ராமதாஸ் செயலால் தொண்டர்கள் ஷாக்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share