அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதே தவறு.. பொங்கியெழுந்த ராமதாஸ் - பாமகவில் பரபரப்பு..!
35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அன்புமணி தான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை ஆட துவங்கி முதலில் அடித்து ஆடியதும் அன்புமணி தான். நான் போகிற போக்கில் எதையும் சொல்லவில்லை ஆதாரபூர்வமாக தான் அனைத்தையும் சொல்கிறேன்.
பாண்டிச்சேரி பொதுக்குழுவில் மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொண்டது யார்?. வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்து அறிவிப்பு வெளியிட்டேன். சுவற்றில் வீசிய பந்து போல உடனே மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா?. மேடை நாகரிகம் சிறிதுமின்றி அனைவரின் முன்பும் காலை ஆட்டிக் கொண்டிருந்ததும், மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் என்ன தவறு செய்தேன். கட்சிப் பதவியிலிருந்து என்னை ஏன் பதவி இறக்கம் செய்ய வேண்டும்? என அன்புமணி ராமதாஸ் கேட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பும் செயல். தான் செய்த தவறுகளை மறைத்து கட்சிக்காரர்களிடம் அனுதாபம் தேட முற்சிக்கிறார்.
இதையும் படிங்க: வளர்த்த கடா மார்பில் பாய்கிறது..! அன்புமணிக்கு பாடம் புகட்டிய ராமதாஸ்..!
சொல்லப்போனால் தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியை என்னுடைய சத்தியத்தையும் மீறி 35 வயதிலேயே மத்திய கேபினட் அமைச்சராக்கியதுதான் நான் செய்த தவறு. என்னை குற்றவாளியாக அடையாளப்படுத்தி கட்சியினரிடம் அனுதாபை தேட முயற்சிக்கும் அன்புமணிக்கு, நான் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். அன்புமணி மீது ஒளிவு மறைவின்றி குற்றச்சாட்டுகளை உங்கள் முன் வைக்கிறேன் ஆவேசமாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: அம்மவைவிட மகள் மூத்தவராக இருக்க முடியுமா.? கமலுக்கு ஆதரவாக அன்புமணி ஆவேசம்!