×
 

அரசியல் வேறு! நட்பு வேறு! விமர்சனங்களை தாண்டி தலைவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 18, 2026) தமிழக அரசியலின் வெவ்வேறு துருவங்களாக விளங்கும் முக்கியத் தலைவர்கள் தற்செயலாகச் சந்தித்துப் பேசி கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டினால் கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில், தத்துவ ரீதியாக வெவ்வேறு துருவங்களாக விளங்கும் நான்கு முக்கியத் தலைவர்கள் இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தற்செயலாகச் சந்தித்துக் கொண்ட நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே, பொது இடத்தில் அவர்கள் காட்டிய இந்தப் பண்பு "முறுவலிக்கும் முரண்கள்" என போற்றப்படுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திமுக மூத்த தலைவர் திருச்சி சிவா, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இந்தச் சந்திப்பில் இடம்பெற்றனர்.

வெவ்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும், பயணங்களுக்காகவும் திருச்சி விமான நிலையம் வந்திருந்தபோது இந்தத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. இன்று காலைதான் தஞ்சாவூரில் தமிழிசை பேசுகையில், திருமாவளவன் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார் (ஆட்சியில் பங்கு) என்று விமர்சித்திருந்தார். அதேபோல், பாஜகவின் செயல்பாடுகளை ஜனநாயகப் படுகொலை என்று திருமாவளவன் சாடியிருந்தார். இத்தகைய அரசியல் அக்னிப் பிழம்புகளுக்கு மத்தியிலும், நேரில் சந்தித்தபோது கைகுலுக்கி, நலம் விசாரித்துத் தலைவர்கள் காட்டிய நாகரிகம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க: தோல்வி பயத்தில் மாநில சுயாட்சி பேசும் ஸ்டாலின்.... தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

இந்தச் சந்திப்பின் போது திமுக எம்பி திருச்சி சிவா அவர்கள் எடுத்த 'செல்ஃபி' புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள திருமாவளவன், அதற்கு 'முறுவலிக்கும் முரண்கள்' என மிக அழகாகத் தலைப்பிட்டுள்ளார்.

அரசியல் கொள்கைகள் வேறாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் தலைவர்கள் பேணும் இந்த நட்பு ரீதியான உறவு, தமிழக அரசியலின் ஆரோக்கியமான பண்பாட்டை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இந்தக் புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: கைது செய்யப்பட்ட சீமான்.. பின்னர் விடுவிப்பு..!! வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share