RCB வெற்றி விழாவில் நிகழ்ந்த சோகம்... கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 10 பேர் உயிரிழப்பு!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கோப்பையை வென்ற RCB அணியை வரவிருக்கும் நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 18 வது ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முதல்முறையாக ஆர் சி பி அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் தனது 18 ஆண்டுகால கனவை நினைவாக்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இந்த நிலையில் சொந்த ஊர் திரும்பிய பெங்களூர் அணி கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு சென்று கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் பெங்களூரு அணி வீரர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வரவேற்றார். தொடர்ந்து விதான் சவுதாவின் முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை பெற்றனர்.
இதையும் படிங்க: "ஈ சாலா கப் நம்தூ"... RCB அணியை கொண்டாடிய சித்தராமையா!
ஆர் சி பி அணியை வரவேற்க விதான் சவுதா பகுதியில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு உள்ளனர். உயர் நீதிமன்ற கட்டடம் மற்றும் மரங்கள் மீது ஏறி நின்றும் வீரர்களை வரவேற்க ரசிகர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். கர்நாடக சட்டமன்றம் அமைந்துள்ள விதான் சவுதா பகுதியில் கிரிக்கெட் வீரர்கள் திரண்டு உள்ளதால் அப்பகுதியே விழா கோலம் கொண்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியை வரவேற்க ரசிகர்கள் திரண்டனர்.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம் கேட் 6ல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆர்.சி.பி ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இதையும் படிங்க: 18 ஆண்டுகளாக இந்த நாளுக்காக காத்திருந்தோம்... RCB ஜெர்சியுடன் டிகே சிவக்குமார் வீடியோ!!