×
 

கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் (Dropout Rate) அதிகரித்துள்ளதாகக் கூறி, மத்திய அரசு வெளியிட்ட UDISE+ 2024-25 அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை திமுக அரசை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த நான்கரை கால திமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம்  முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையைச் சுட்டிக்காட்டி அவர் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமானப் பதிவை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2021–22 ஆம் ஆண்டிலிருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில் 0% ல் இருந்து 2.7% ஆகவும், நடுநிலை வகுப்புகளில் 0% ல் இருந்து 2.8% ஆகவும், உயர்நிலை வகுப்புகளில் 4.47% ல் இருந்து 8.5% ஆகவும் அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தல்: அண்ணாமலை மற்றும் எல்.முருகனுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கிய பாஜக

தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் லாபம் ஈட்டுவதற்காக, அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராமல் அதன் கட்டமைப்பை முழுமையாகச் சிதைத்துவிட்டனர் என்று அவர் குற்றம் சாட்டினார். உலகத் தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை  ஏற்காமல், திமுக அரசு கொண்டு வந்த வினோத கல்விக் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் கல்வியை வியாபாரமாக்கி, நடுத்தரக் குடும்பங்களைச் சோதனையில் தள்ளியுள்ளது இந்த அரசு எனச் சாடினார் ஒற்றை ஆசிரியர் பள்ளிகள்: தமிழகத்தில் சுமார் 3,671 அரசுப் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கி வரும் அவல நிலையை அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: ட்ரான்ஸ்ஃபர் கொடுக்க லஞ்சம்... அம்பலமான உண்மை..! K.N.நேருவை பூந்து விளாசிய அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share