×
 

சந்தேக மரணமா? குண்டாஸ் போடுங்க... ரிதன்யாவின் தந்தை வலியுறுத்தல்

தன் மகளின் மரணத்திற்கு காரணமான கணவன் கவின் மற்றும் அவரது பெற்றோர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என ரிதன்யாவின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேர்ந்தவர் தொழிலதிபரின் மகள் ரிதன்யா. இவருக்கு கவின்குமார் என்பவரோடு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 78 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கணவன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதனால் மனமடைந்து போன ரிதன்யா செய்வதறியாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே தனது காரை ஓட்டிச் சென்ற ரிதன்யா தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வழிபட்டுள்ளார். தொடர்ந்து சாலையோரமாக காரை நிறுத்திய அவர், தனது வாழ்க்கை தொடர்பாகவும், தனது சாவுக்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு அனுப்பி விட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை என்றும் ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற ஆடியோவையும் ரிதன்யா தன் அப்பாவுக்கு அனுப்பினார். மேலும், கணவன் கவின்குமார் மற்றும் மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக ரிதன்யா வேதனை தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: விடியா திமுக அரசு! கோவையில் வரும் 5 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்... அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இனியும் தன்னால் வாழ முடியாது என தந்தைக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு ரிதன்யா எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இவர்கள் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, தங்கள் மகள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என ரிதன்யாவின் பெற்றோர் கோரி வருகின்றனர். இந்த நிலையில் கவின் குடும்பத்தார் துணை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கூறி மனுதாக்கல் செய்துள்ளன.

தன் மகளின் இறப்பு சந்தேக மரணம் என்று மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கவின் மற்றும் அவரது பெற்றோர் மீது குண்டர் சட்டம் போட வேண்டும் என்றும் ரிதன்யாவின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.

தன் மகளுக்கு நடந்ததை போல வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என வலியுறுத்தி முதல்வரின் தனி பிரிவிற்கு ரிதன்யாவின் தந்தை புகார் கொடுத்துள்ளார். மேலும் தன் மகள் குறித்து யாரும் அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: நிரந்தர பணியாக மாற்றங்கள்! ஊர்க்காவல் படையினருக்காக குரல் கொடுத்த சீமான்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share