×
 

#BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

சென்னையில் ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே போலீசை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற பிரபல ரவுடி தொப்பை கணேசன் போலீசாரால் சுட்டுக்கொலை. 

கடந்த ஜனவரி 30ம் தேதி 30 லட்சம் பணம், 15 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொப்பை கணேசன் இதுவரை கொள்ளையடித்த பொருட்களை மீட்க, பொருட்களை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அப்போது மாதாவரம் ரவுண்டானா அருகே தொப்பை கணேசன் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். குண்டு பாய்ந்து  சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த தொப்பை கணேசனை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொப்பை கணேசன் உயிரிழந்ததை உறுதி செய்தனர். தற்போது அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 


யார் இந்த தொப்பை கணேசன்?

பிரபல ரவுடியான சேராவோட கூட்டாளியாக தொப்பை கணேசன் செயல்பட்டு வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வியாசர்பாடி பி.வி. காலனியைச் சேர்ந்த தொப்பை கணேசன் மீது 5க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளன. இதே போன்று அடிதடி, கொலை உள்ளிட்ட சம்பவங்களல் ஈடுபட்டு வந்ததால ஏற்கனவே இவர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் துப்பாக்கி முனையிலும் இவர் கைது செய்யப்பட்டவர். 

எந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றாலும், வெளியே வந்ததுமே மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். 2020ம் ஆண்டு துப்பாக்கி, 5 நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கி தோட்டக்களை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share