×
 

"திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

திமுக ஒரு வற்றாத ஜீவ நதி என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று முழக்கமிட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறியது. காங்கிரஸ் கட்சியில் இரண்டு அமைச்சர்கள் இடம் பிடித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு அமைச்சர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு அமைச்சர் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் குறித்தும் திமுகவின் நிலை குறித்தும் ஆர்.எஸ். பாரதி பேசினார்.

திமுக என்பது வற்றாத ஜீவநதி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அவ்வப்போது வருபவர்கள் இளைப்பாறிவிட்டு சென்றுவிடுவார்கள் என்றும் ஆனால், என்னைப்போன்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் எனவும் கூறினார். ஆட்சியில் இருந்தபோதுகூட இத்தனை தொண்டர்கள் வந்து திமுக தலைவர் ஸ்டாலினை பார்க்கவில்லை என்றும் ஆனால் தேர்தலுக்குப் பிறகு சாரைசாரையாக வந்து பார்க்கிறார்கள் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

அண்ணா, பெரியார், காமராஜர் போன்ற மாபெரும் தலைவர்கள் அரசியல் நடத்திய பூமியில் லாட்டரி சீட்டு குடும்பத்திடம் அரசியல் சென்றுவிட்டது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது என்றும் இது தமிழ்நாட்டின் தலைகுனிவு எனவும் கூறியுள்ளார். மகாத்மா காந்தி போல எங்களால் இருக்க முடியாது என்று கூறியுள்ள அவர், அவர்கள் எப்படி எங்களிடம் பேசுகிறார்களோ அப்படி நாங்களும் அவர்களிடம் பேசுவோம் என்றார்.

இதையும் படிங்க: திமுக மீது வீண்பழி..! அதிமுகவுடன் கூட்டணி முயற்சியா..? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

அதிகமாக பேசினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்றும் நாங்கள் காந்தி போன்று இருக்க முடியாது எனவும் கூறினார். ராஜா அவருடைய கொள்கையில் உறுதியாக உள்ளார் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு அணியில் வென்றவர்கள் வேறு அணிக்கு சென்றுள்ளனர் என்றும் சென்றவர்களைப் பற்றி கவலையில்லை., திமுகவுக்கு இப்படிப்பட்ட அதிர்ச்சிகள் புதிதல்ல எனவும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி சொல்லாமல் கூட்டணியில் இருந்து விலகியதாகவும் அது மிகப்பெரிய துரோகம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெண்கள் பற்றிய ஆபாச பதிவு..! பதில் சொல்லாமல் தலை தெறித்து ஓடிய ஆ.ராசா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share