சேலத்தில் மூடியே கிடக்கும் அம்பேத்கர் சிலை. விரைவில் திறப்புவிழா... அமைச்சர் வன்னியரசு உறுதி..!!
சேலத்தில் ஐந்து ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளிடையே தொடர்ந்து பேசப்படும் பிரச்சினையாக உள்ளது. இந்திய அரசியலமைப்பின் முதன்மைச் சிற்பியும், சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவருமான டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் இந்தச் சிலை அமைக்கப்பட்டாலும், அது இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தச் சிலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததாக கூறப்பட்டது. சிலை அமைக்கப்பட்ட பின்னர் திறப்பு விழாவும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிலையின் வடிவமைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஒரு தரப்பினர் இந்த சிலையை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த வருகின்றனர்.
இந்த நிலையில், சேலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாமல் இருக்கும் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களிடம் பேசினார். கால் மேல் கால் போட்டபடி இருப்பதால் அம்பேத்கர் சிலையை திறக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு 'நோ என்ட்ரி'! மோசடி கும்பலுக்கு அதிரடி செக்..! சேலம் அரச மருத்துவமனை முக்கிய முடிவு..!!
இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் வன்னியரசு கூறுகையில், அம்பேத்கரை ஒரு சாதிய தலைவராக சுருக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். சிலைகளை திறக்க முடியாத நிலை தமிழகம் முழுவதும் இருப்பதாக கூறியுள்ளார். சேலத்தில் மூடி வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகம் கேள்விக்குறி..! துரோகம் பண்ணிட்டீங்க... தவெகவை பந்தாடிய சீமான்..!