தமிழகமே அதிர்ச்சி.. சேலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு..!
ஏற்கனவே சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கோவிட்-19 புதிய தொற்றுநோய் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுவாச நோய் தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதனிடையே, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் சேத்துக்குழி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் ஜேசிபி ஆபரேட்டர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து குடும்பத்தினர் தமிழரசனை மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழரசனை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பொழுது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: பாமகவால் தேமுதிகவிற்கு அடித்த ஜாக்பாட்... திடீர் மனமாற்றத்தில் எடப்பாடி பழனிசாமி..!
தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு தமிழரசனுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தமிழரசன் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை டீன் தேவி மீனாள் கூறுகையிக், உயிரிழந்த தமிழரசனுக்கு கிட்னி பாதிப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட இணை நோய் பாதிப்பு இருந்ததால் தான் அவர் உயிரிழந்தார்” எனத் தெரிவித்துள்ளர். இருப்பினும் கொனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த இளைஞனர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்த இடி.. பேருந்து கட்டணத்தை திமுக அரசு உயர்த்தப் போகுது.. ஷாக் கொடுக்கும் நயினார் நாகேந்திரன்!