×
 

நண்பருக்கு ஜாமின் கையெழுத்து போட்ட நபர்.. விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை..!

சென்னையில் நண்பருக்கு ஜாமின் கையெழுத்து போட்ட நபர் மனவிரக்த்தியில் மனைவி முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பேஷன் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த ஜான் தேவராஜன் என்பவர் பெருவள்ளூரில் உள்ள பூங்காவில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜான் தேவராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நண்பர் ஒருவருக்கு ஜாமீன் கையெழுத்திட்டு, 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் கடன் வாங்கிய நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால், தேவராஜன் வங்கிக் கணக்கில் இருந்த தவணைத் தொகையானது எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜன் வங்கியை தொடர்பு கொண்டு இது குறித்து விவரம் கேட்டுள்ளார்.

அவரது நண்பருக்காக ஜாமீன் கையெழுத்து விட்டதால் தேவராஜன் தான் அனைத்து தொகையும் கட்ட வேண்டும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரத்தியடைந்த தேவராஜன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: அரசு நிகழ்ச்சிக்கு அடாவடி வசூல்... இன்று மாலைக்குள் கெடு விதித்த மா.சுப்பிரமணியன்..!

 இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தேவராஜன் வெளியில் சென்ற அவரது மனைவிக்கு தொலைபேசியில் வீடியோ காலில் பேசிய அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி வீட்டிற்கு விரைந்துள்ளார். 

அப்போது தேவராஜன் மனைவியிடம் வீடியோ கால் பேசியபடியே வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக இது குறித்து மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: துண்டுச் சீட்டில் புது யுக்தி..! தலைவரின் ஸ்டைலை உல்டாவாக்கிய திமுக எம்.பி., கல்யாணசுந்தரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share