இதுதாங்க தங்க மனசு...!! - குப்பைத் தொட்டியில் அழுக்கு தலையணைக்குள் கொத்து கொத்தாய் கிடந்த தங்க நகைகள்... உடனே தூய்மை பணியாளர் செய்த காரியம்...!
குப்பையில் கிடந்த 25 பவுன் தங்க நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி - பல்வேறு தரப்பினர் பாராட்டு
மதுரை மாநகராட்சி 75 ஆவது வார்டுக்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் நியுரைஸ்மில் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கம் (52) விவசாயி ஆன இவர் நேற்று தனது மகளின் திருமணம் தை மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக தான் வைத்திருந்த 25 பவுன் நகையை தனது வீட்டில் இருந்து தலையணைக்குள் ஒரு சிறிய தலையணைக்குள் வைத்து பத்திரப்படுத்திவைத்துள்ளார்.
இந்நிலையில் தனது மகளின் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து தலையணை, துணிகள் உள்ளிட்ட பழைய பொருட்களை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டியில் போட்டுசென்றுள்ளார்.
இதையடுத்து இன்று காலை தலையணையில் 25 பவுன் தங்க நகையை வைத்திருந்த்து நினைவுக்கு வந்துள்ளது. இதனால் பதறியடித்த தங்கம் உடனடியாக அவரது வீட்டின் அருகே இருந்த குப்பை தொட்டியில் தேடியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING வெளியான சீக்ரெட் தகவல்... தலைமைச் செயலகத்தை சுற்றி வளைத்த போலீஸ் ... திரும்பிய திசையெல்லாம் தீவிர சோதனை...!
ஆனால் தங்க நகை கிடைக்காத நிலையில் உடனடியாக 75 ஆவது வார்டு மேற்பார்வையாளர் மருதுபாண்டியனை தொடர்புகொண்டு தனது மகளின் திருமணத்திற்காக தலையணைக்குள் நகையை வைத்திருந்த்தாகவும், அதனை ஞாபக மறதியில் குப்பை தொட்டிக்குள் வீசி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து மேற்பார்வையாளர் அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த மீனாட்சி என்ற தூய்மை பணியாளர் குப்பை தொட்டியில் தேடிப்பார்த்தபோது அங்கு குப்பை தொட்டிக்குள் தலையணை கிடப்பதை பார்த்து பின்னர் தலையணை பிரித்து பார்த்தபோது அதற்குள் 25 பவுன் நகை இருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் நகையின் உரிமையாளர் தங்கத்தை தொடர்புகொண்ட மேற்பார்வையாளர் மருதுபாண்டியன் மற்றும் தூய்மை பணியாளர் மீனாட்சி ஆகிய இருவரும் 25 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளனர்.
இதனை பெற்றுக்கொண்ட நகை உரிமையாளர் தங்கம் தனது மகளின் திருமணத்திற்க்காக வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து சேர்த்துவைத்த 25 பவுன் நகையை மீட்டு தந்த மேற்பார்வையாளர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
மதுரையில் மாநகராட்சி குப்பை தொட்டியில் கிடந்த 25 பவுன் தங்க நகையை எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த பெண் தூய்மை பணியாளர் மற்றும் மேற்பார்வையாளரின் தங்கமான செயலை பார்த்து நெகிழ்ச்சியடைந்து பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கமாட்டோம் - சபாநாயகர் செல்வம் திட்டவட்டம்!