×
 

சின்னம்மா RETURNS! சசிகலா - செங்கோட்டையன் சந்திப்பு? பரபரக்கும் அரசியல் களம்..!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலாவை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார்.

செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணி மற்றும் கட்சி உள்ளூர் மாவட்ட அரசியலில் அவரது ஆதரவு முடிவு. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எடப்பாடி ஆதரவு அளித்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 

அதிமுகவின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை செங்கோட்டையன் புறக்கணித்து வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். 

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பணப்பட்டுவாடா? - பெண் நிர்வாகிகள் செயலால் பரபரப்பு...!

இருப்பினும் சமீபத்தில் செங்கோட்டையன் கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் தான் மனம் திறந்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார். என்ன கருத்து சொல்லப் போகிறேன் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம் அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.

நேற்றைய தினம் இந்த தகவலை கொடுத்த செங்கோட்டையன், தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவை முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் செங்கோட்டையின் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், சசிகலாவை சந்தித்து இருப்பதாக வெளியாகும் தகவல் மேலும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு செங்கோட்டையன் காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. ஐந்தாம் தேதி மனம் திறந்து பேச இருப்பதாக செங்கோட்டையன் கூறி இருக்கும் நிலையில் அந்த செய்தியாளர் சந்திப்பில், மீண்டும் செயல்படுவது தொடர்பாக அவர் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமமுகவும் அம்பேலா?... பாஜக கூட்டணிக்கு சைலண்ட்டாக ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share