×
 

சாத்தான்குளம் வழக்கு..! மேல்முறையீடு செய்ய குற்றவாளிகளுக்கு அவகாசம்..! உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

சாத்தான்குளம் பழத்தின் குற்றவாளிகள் ஒன்பது பேரும் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. இதை அடுத்து 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு குற்றவாளிகள் ஒன்பது பேரும் மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்ற கிளை அவகாசம் வழங்கி உள்ளது.

இதையும் படிங்க: பெரும் எதிர்ப்பார்ப்பு... சாத்தான்குளம் வழக்கில் இன்று தண்டனை விபரம் அறிவிப்பு..!!

குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்த கோரி தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தண்டனையை உறுதி செய்யுமாறு தமிழக அரசு சிபிஐ மனு தாக்கல் செய்த நிலையில் ஒன்பது குற்றவாளிகளும் காணொளி வாயிலாக ஆஜர் ஆகினர். தண்டனை உறுதிப்படுத்தக் கூடிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை ஒன்பது பேரும் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க: எலெக்‌ஷன் முடிஞ்சது! பெட்ரோல், டீசல் விலை உயருமா?! ட்விஸ்ட் வைத்த மத்திய அரசு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share