×
 

சாத்தான்குளம் வழக்கில் அதிரடி திருப்பம்... குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்க வாய்ப்பு...!

இவர்களின் உடல்நிலை, மன நிலை குறித்தான அறிக்கை மத்திய அரசு மாநில அரசுகள் மூலமாக இன்று  தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரின் மனநிலை , உடல்நிலை குறித்த அறிக்கையை மத்திய மாநில அரசு இன்று தாக்கல் செய்கிறது.இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை விபரங்கள் அறிவிக்க வாய்ப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து  வந்த நிலையில்   இந்த கொலை வழக்கில் மதுரை மாவட்டம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன்   குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கடந்த 23ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.இவர்களின் உடல்நிலை, மன நிலை குறித்தான அறிக்கை மற்றும் சம்பள கணக்கு மற்றும் சொத்து விவரங்களையும் சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை அதிகாரிகள் 9பேரின் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு மாநில அரசுகள் மூலமாக அறிக்கையாக 2 ந் தேதி   தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்

அதன்படி இன்று  அறிக்கை தாக்கல் செய்த பின்னர்   நீதிபதி 9 பேரின் தண்டனை விபரங்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய தந்தை - மகன் லாக்கப் டெத்... கொடூர காக்கிகளுக்கு இன்று தீர்ப்பு... சாத்தான்குளம் வழக்கு கடந்து வந்த பாதை இதோ...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share