சவுக்கு சங்கர் மீதான "குண்டாஸ் ரத்து"..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..! புதிய திருப்பம்..!
Youtuber சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சாதாரண அரசு ஊழியராகத் தொடங்கி, ஊழல் வெளிப்பாட்டாளராகவும், யூடியூப் ஊடகவியலாளராகவும் உருவெடுத்த சவுக்கு சங்கர்… சவுக்கு என்ற இணையதளமும், சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனல் மூலமும் துணிச்சலுடன் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரது விமர்சனங்கள் அரசியல் கட்சிகளையும், அதிகாரிகளையும் தொடர்ந்து சவால் செய்து வருவதால், அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 2024 மே மாதம் கோவையில் காவல்துறையை அவதூறு செய்ததாகக் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், ஜாமினில் விடுவிக்கப்பட்ட பின்னரும் தனது விமர்சனங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
சவுக்கு சங்கர் மீது 2026-ல் மூன்றாவது முறை குண்டர் சட்டம் பாய்ந்ததற்கு முக்கிய காரணம், ஜாமீன் நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தில் சரணடையாமல் ஆந்திராவில் தலைமறைவாக இருந்தது. சென்னை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கு முன் 2025 டிசம்பரில் பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.
மார்ச் 2026-ல் ஜாமீனில் வெளியே வர வேண்டிய நிலையில் இரு புதிய FIRகள் பதிவாகின. இதனால் அவர் "பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல்" என வகைப்படுத்தப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஒரு ஆண்டு வரை ஜாமீன் இல்லாமல் தடுத்து வைக்க அனுமதிக்கும். முன்பு 2024 ல் பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது அவதூறான கருத்துகள், கஞ்சா வைத்திருந்த வழக்கு உள்ளிட்டவை காரணமாகவும் குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!
இந்த நிலையில் youtuber சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. வேறு வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்ற பட்சத்தில் உடனடியாக சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியாகுவார் எனக் கூறப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில் அதிரடியாக சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: விஜய்யின் தவெகவுக்கு தாவும் பாஜக இளைஞர்கள்! கட்சியை காக்க மீண்டும் தலைமை ஏற்கிறார் அண்ணாமலை?!