×
 

பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு உணர்வுகளை தடுக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் சாதிய பாடலுக்கு நடனமாடிய சம்பவம் அடங்குவதற்குள், ஸ்ரீவைகுண்ட தலித் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு நெல்லையில் சாதிய வன்மத்தால் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படி மாணவர்கள் மத்தியில் சாதிய வன்மம் அதிகரித்து வருவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு உணர்வுகளை தடுக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’டிரஸைக் கழட்டுங்க’ பள்ளி சென்று திரும்பிய சிறுவர், சிறுமிகளை மிரட்டி ஆபாச புகைப்படம் - இருவரை புரட்டி எடுத்த பொதுமக்கள்...!

அதன்படி, பள்ளிகளில் சாதியை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் கைகளில் பட்டைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர் மற்றவர்களுக்கு தெரியும்படியான செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகைப்பதிவேட்டில் சாதி பெயர் இருக்கக்கூடாது, சாதி குறியீடுகளுடன் பள்ளிக்கு வரக்கூடாது, ஆசிரியர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000... வெளியான சூப்பர் அறிவிப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share