×
 

பள்ளி திறப்பு தேதி மாற்றமா? - தமிழ்நாடு அரசு வெளியிட்ட இறுதி அறிவிப்பு! 

ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள பள்ளி கல்வித்துறை. பள்ளி வளாகம் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. 

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அடுத்த வாரம் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிகளை முழுமையாக பயன்படுத்தும் வகையில் சுத்தப்படுத்தி தயார் செய்ய வேண்டும் என்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்து கரும்பலகைகளுக்கு மைப்பூசி தயார் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கம்.. பாஜகவுக்கு பெரிய இழப்பு.. பெங்களூரு புகழேந்தி சொல்லும் காரணங்கள்.!!

மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் போதை பொருள் எதிர்ப்பு குறித்து பேச்சு, கவிதை, துண்டு பிரசுரம் மற்றும் சுவரொட்டி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியாகவும் தரமானதாகவும் தாமதமின்றியும் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மதிய உணவு இடைவேளைமுடிந்து 20 நிமிடங்கள் மாணவர்களை சிறார் பருவ இதழ்களை படிக்க வைக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: திமுக கூட்டணியை அசைக்க ஒரு கொம்பனும் இல்லை.. மாஸ் காட்டும் செல்வபெருந்தகை.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share