மதச்சார்பற்ற கல்விக்கு மாபெரும் முன்னெடுப்பு ..! கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவு!
கேரளாவில் புதிதாக தொடங்கப்படும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு மதம் சார்ந்த பெயர்கள் வைக்கப்படாது என அம்மாநில அமைச்சரவை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவின் மதச்சார்பற்றப் பண்புகளை வலுப்படுத்தும் நோக்கில், கேரள மாநில அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. இனி வரும் காலங்களில் கேரளா முழுவதும் அரசு சார்பில் தொடங்கப்படும் புதிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மதம் சார்ந்த பெயர்களைச் சூட்டப்போவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அதிரடி முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
கல்வி நிலையங்கள் என்பது அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான இடங்கள். அங்கு ஆரம்பத்திலிருந்தே மதச்சார்பற்ற எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதே இந்த முடிவின் அடிப்படை நோக்கமாகும். இதன் மூலம் அரசு கல்வி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்ததாகப் பார்க்கப்படுவது தவிர்க்கப்படும். தற்போதைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, புதிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு ஊர்ப் பெயர்கள் அல்லது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தமிழறிஞர்களின் பெயர்கள் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வைக்கப்படும்.
ஏற்கனவே கல்வியறிவு மற்றும் சமூக சீர்திருத்தங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் கேரளா, தற்போது நிர்வாக ரீதியாகவும் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிப்பதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அரசின் இந்த முன்னெடுப்பிற்குச் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மாணவர்களிடையே மத நல்லிணக்கத்தை வளர்க்க இது ஒரு மிகச்சிறந்தத் தொடக்கம் எனப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இனி 'கேரளா' இல்லை.. கேரளம்! மாநில பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்!
கல்வி நிலையங்கள் அறிவைப் போதிக்கும் இடங்கள்,அவை எந்தவொரு மத அடையாளத்திற்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற கேரள அரசின் இந்த முற்போக்கான முடிவு, மற்ற மாநிலங்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கேரளா: நீர்வழி சுரங்க பாதையில் ஒளி-ஒலி காட்சிகளுடன் பயணம்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்..!!