×
 

குடிப்பவன் மதுப்பிரியன்-னா... கொலை செய்பவன் கொலை பிரியனா..? சீமான் சரமாரி கேள்வி..!

குடிப்பவர்கள் ஓட்டு தனக்கு தேவையில்லை என சீமான் தெரிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது குடிப்பவர்கள் ஓட்டு தனக்கு தேவையில்லை என சீமான் தனது பரப்புரையில் பேசினார். குடிப்பவர்கள் மது பிரியர்கள் என்றால் கொலை செய்பவர்கள் கொலை பிரியர்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

ஏற்கனவே ஓசி பஸ்ஸில் செல்பவர்கள் ஓட்டு தனக்கு தேவையில்லை என்று சீமான் பேசியிருந்தார். அது மட்டும் அல்ல அது கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தனக்கு ஓட்டு போட வேண்டாம் அதற்கு பதிலாக தனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார். தற்போது குடிப்பவர்கள் ஓட்டு தேவையில்லை என்று சீமான் பேசியிருக்கிறார். 

இதையும் படிங்க: இதுமட்டும் நடந்துட்டா! தேர்தல்ல இருந்தே விலகிடுறேன்!! பாஜக, காங்., கட்சிகளுக்கு சீமான் சவால்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share