×
 

500 கிமீ தூரத்துக்கு TRANSFER! சிறை தண்டனையை விட கொடுமை... காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்!

சிறைத்துறை முதல்நிலை காவலர்கள் பணியிடமாற்ற உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

முன்னறிவிப்பு இல்லாமல் முதல் நிலை காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக சீமான் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு சிறைகளில் பணிபுரிந்து வந்த 150 முதல்நிலை காவலர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திமுக அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் ஓரிரு நாட்களில் திறக்கப்படவுள்ள நிலையில், சிறைத்துறை காவலர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து, அதற்காகப் பெருந்தொகையைக் கட்டணமாகச் செலுத்திவிட்ட நிலையில், திமுக அரசு திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி காவலர்களை இடமாற்றம் செய்துள்ளது சிறைத்தண்டனையை விடவும் மிகப்பெரிய கொடுந்தண்டனை என்று சாடினார்.

பொதுக்கலந்தாய்வு ஏதுமில்லாத இவ்விடமாற்ற உத்தரவின் மூலம் திமுக அரசு காவலர்களை மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தையும் தண்டித்துள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும். விரைவில் இரண்டாம்நிலை சிறைத்துறை காவலர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்ற தகவல் காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுத்துறைகளில் இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை வழங்கி, அதனால் ஏற்படும் காலி இடங்களையும் கணக்கிட்டு, பொதுக்கலந்தாய்வு நடத்தி காவலர்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து அதன்பிறகு இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை என்று விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: அடிபொலி! இளைய காமராஜரா விஜய்? சீமான் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்...

ஆனால், இவற்றில் எதுவொன்றையும் பின்பற்றாமால் திமுக அரசு திடீரெனச் சிறைக்காவலர்களை 500 கிமீ தூரத்திற்கு இடமாற்றம் செய்து தண்டித்துள்ளது மட்டுமின்றி, பொதுக்கலந்தாய்வின் மூலம் தங்களது சொந்த மாவட்டம் அல்லது விருப்பமான இடங்களைக் கண்டறியும் வாய்ப்பையும் தட்டிப்பறித்துள்ளது மாபெரும் கொடுமை என குற்றம்சாட்டினார். எனவே, சிறைத்துறை முதல்நிலை காவலர்களுக்கான திடீர் பணியிடமாற்ற உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும் பொதுக்கலந்தாய்வு நடத்தி அதன் பிறகு முறையான இடமாறுதல் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: பேரன்புக்காரர்! தயங்காது கருத்துக்களை வெளிப்படுத்தும் பெருந்தகை.. நடிகர் ராஜேஷ் மறைவுக்கு சீமான் இரங்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share