விஷத்தை தூவி இருக்காரு அண்ணாமலை.. மன்னிப்பு கேட்கணும்..!! செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!
அண்ணாமலை விஷயத்தை தூவி இருப்பதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது லாவண்யா, தஞ்சாவூர் அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து, பத்து நாட்களுக்குப் பிறகு ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்த உடனேயே பல்வேறு கருத்துகள் எழுந்தன.
பள்ளி விடுதி நிர்வாகம் மற்றும் சில ஊழியர்கள் அவரை கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் துன்புறுத்தப்பட்டதாகவும் அவரது பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்தார்.
தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். லாவண்யா பள்ளி நிர்வாகத்தால் தொடர்ந்து மதமாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பேசியிருந்தார். சிபிஐ அறிக்கையில், கட்டாய மதமாற்றத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வன்முறை தீர்வாகாது..! நீதிபதி மீது அரிவாள் வீச்சு... செல்வப் பெருந்தகை கடும் கண்டனம்..!
இந்த நிலையில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். அண்ணாமலை விஷத்தை தூவி இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். மதக் கலவரத்தை தூண்டுவதற்கும் மத சண்டையை ஏற்படுத்துவதற்கும் தமிழக அரசின் மீது அண்ணாமலை அபாண்டமாக பழி சுமத்தி இருந்ததாகவும் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு புலனாய்வு குழுவே இதற்கு காரணம் மதமாற்றம் கிடையாது என்று கூறி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் சொல்றபடி செய்யுங்க! திமுக கூட்டணி வேணும்னு கேளுங்க!! மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை சைலண்ட் ஆர்டர்!