×
 

நடுத்தர மக்கள் தலையில் இறங்கிய இடி... GAS விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு..!!

கேஸ் விலை உயர்வுக்கு செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை உயர்வு என்பது பொதுமக்கள் மீது கூடுதல் சுமை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் ஒன்று எனவும் மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதின் மூலம் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசின் தன்னிச்சையான இந்த முடிவிற்கு கடுமையான கண்டனம் தெரிவிப்பதாகவும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். மார்ச்7 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை உயர்வின் மூலம் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை ரூ.868.50 இலிருந்து ரூ.928.50 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.853 இருந்து ரூ.913 ஆகவும், மும்பையில் ரூ.852.50 இருந்து ரூ.912.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.879 இருந்து ரூ.930 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் விலை ரூ.1929 இருந்து ரூ.2043.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உணவகங்கள், சிறிய உணவு கடைகள் மற்றும் தேநீர் கடைகள் போன்ற தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டி காட்டினார். 

இதையும் படிங்க: பப்புவை நம்பி மக்கிப்போன காங்கிரஸ்.. வெட்கமே இல்லையா? அதிமுக விளாசல்..!!

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share