அங்க மட்டும் சும்மாவா? அதிமுகவிலும் குடும்ப அரசியல் தான்... முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பகிரங்க குற்றச்சாட்டு...!
அதிமுகதிலும் குடும்ப அரசியல் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தது அதேபோல் எடப்பாடி பழனிசாமி என் பெயரை கூட சொல்லாமல் இருந்ததும் அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் தேச பொருளாக மாறிய நிலையில், சட்டசபையிலும் இருவருக்கும் இடையே சமூக நிலை ஏற்படவில்லை. செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்பதை அவரிடமே கேளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தது இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வருவதை உறுதி செய்வதாகவே தெரிந்தது.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். தலைமைக்கு அவர் கெடு விதித்த நிலையில் அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதற்கிடையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் மரியாதை செலுத்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சென்ற நிலையில், சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.
இதையும் படிங்க: வன்மத்தை கக்கிய செங்கோட்டையன்..! பிம்பம் உடைந்து விட்டது... கொதித்துப்போன ஆர்.பி உதயகுமார்...!
இதனிடையே, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது என்பது தெளிவாக இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் மகன், மைத்துனர், மற்றும் மாப்பிள்ளையின் தலையீடு அதிமுகவில் உள்ளதாக செங்கோட்டையன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: விதண்டாவாதமா பேசாதீங்க! ஒற்றை தலைமை கேட்டவரே செங்கோட்டையன் தான்...! செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி...!