பள்ளிவாசலுக்குள் பாலியல் தொல்லை... இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து... அத்துமீறிய காமுகன் அதிரடி கைது...!
பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது.
நரிக்குடியில் பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் - அந்தப் பெண் கூச்சல் இட்டு தப்பி ஓட முயன்றதால் இளைஞர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த அந்த இளம் பெண் திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதி - கத்தியால் குத்திய இளைஞர் கைது சம்பவம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (25). இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நரிக்குடி பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் இன்று தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அப்துல் அஜீஸிடம் மந்திரிக்க சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணை அப்துல் அஜீஸ் திடீரென பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: கொடுமை...! எந்த கொடுஞ்செல்லும் போதாது... கூட்டு பாலியல் வன்முறை சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்...!
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அப்துல் அஜீஸ் தான் வைத்திருந்த சிறிய கத்தியை வைத்து கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.
அந்த இளம் பெண் வலி தாங்க முடியாமல் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அப்துல் அஜீஸை மடக்கி பிடித்து நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த அந்த இளம் பெண் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து நரிக்குடி காவல் நிலைய போலீசார் அப்துல் அஜீஸை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நரிக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கூட்டு பாலியல் வன்கொடுமை! குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்...!