என் கையில ஊசி போட்டாங்க! 8 வயது சிறுமியை எஸ்.ஐ. பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்?
எஸ்.ஐ. வீட்டில் 8 வயது சிறுமி மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நுங்கம்பாக்கம் அருகே ஆயுதப்படை எஸ்.ஐ ராஜு என்பவர் 8 வயது சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என கேட்டபோது அவரது தோழி எஸ் .ஐ. வீட்டை அடையாளம் காட்டியதாகவும், தனது பேத்தியை தேடிச் சென்ற அவரது தாத்தாவை எஸ்.ஐ. தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அங்கிருந்து தங்கள் பிள்ளையை மீட்க சென்றபோது, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததாகவும், தங்கள் குழந்தை எப்படி இங்கு வந்தார் என நியாயம் கேட்கச் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்த போது, போலீசார் குழந்தையின் தாத்தா, அப்பா உள்ளிட்டோரை ஜீப்பில் ஏற சொன்னதாகவும், என்ன நடந்தது என கூட கேட்கவில்லை என்றும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது " - அமித் ஷாவுக்கு சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்...!
இதுவரை சென்னை போலீசார் தங்களுக்கு விளக்கம் கொடுக்காத நிலையில், தனக்கு ஊசி செலுத்தியதாகவும், அங்கேயே தான் தூங்கி விட்டதாகவும், எழுந்து பார்த்தால் தகாத முறையில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்ததாகவும் சிறுமி கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, 2 முதல் 3 முறை அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் எஸ்.ஐ. வீட்டில் இருந்து சிறுமி மீட்கப்பட்ட போ அங்கு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது ஏன்.,நியாயம் கேட்கச் சென்றவர்களை போலீசார் ஏன் தடுத்து நிறுத்தினர்.,சிறுமியை ஆபாச வீடியோ எடுத்திருக்கக் கூடும் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்தப் பிரச்சனையில் ராஜூவுக்கு காவல்துறை உதவுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 8 வயது சிறுமி மயக்க ஊசி போட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இளம் பெண்களை குறிவைத்து சீரழித்த சைக்கோ.. ஜப்பானை அலறவிட்ட டிவிட்டர் கில்லர் சிக்கியது எப்படி?