×
 

#BREAKING: சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!

முடா வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

மைசூர் நகர மேம்பாட்டு திட்டத்தை முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மைசூரு நகர மேம்பாட்டு நிதியிலிருந்து சட்ட விரோதமாக 14 மனைகள் பெற்றதாக சித்தராமையா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த முடா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சித்தராமையாவுக்கு சொந்தமான 90 இடங்களில் உள்ள அசையா சொத்துக்களை அமலாகத்துறை முடக்கியுள்ளது. 

இதையும் படிங்க: 11 பேர் பலிக்கு பதவி வெறிதான் காரணம்.. சித்தராமைய்யா, சிவக்குமாருக்கு எதிராக போர்க்கொடி!!

இது மட்டுமல்லாமல் அவரை தவிர்த்து வழக்கு தொடர்புடைய மற்றவர்களின் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சோகத்தை ஏற்படுத்திய பெங்களூரு உயிரிழப்பு சம்பவம்..! RCB நிர்வாகி உட்பட 3 பேர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share