×
 

சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையின் முதல் வழக்கு பதிவானது.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற உடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை ஜூன் 9 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். பெண்களை சிங்கம் போன்ற தைரியத்துடன் உருவகப்படுத்தும் இந்தப் பெயர், பெண் காவலர்களைக் கொண்ட அனைத்து பெண் படையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு 354 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. IG தலைமையில் செயல்படும் இந்தப் படை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, விரைவான பதிலளிப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

தொடக்க விழாவுக்குப் பிறகு, சிங்கப்பெண் அதிரடிப்படையினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி-கல்லூரி பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து வாகனங்கள் மூலம் தொடர் கண்காணிப்பு நடைபெறுகிறது.

ட்ரோன்கள் உதவியுடன் உயர் பாதுகாப்பு பகுதிகளை கண்காணிப்பதுடன், பெண்கள் மற்றும் சிறுமியரிடம் நேரடியாகப் பேசி அவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சென்னையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை  மூலமாக முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இது பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய படையின் விரைவான செயல்பாட்டை பிரதிபலிக்கிறது.

இதையும் படிங்க: ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

இந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் நடைபெற்றது. வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம் சுரேஷ் என்ற நபர் தவறாக நடக்க முயற்சி செய்தார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக உதவி கோரியதோடு, சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு தகவல் தெரிவித்தார். படையினர் விரைந்து செயல்பட்டு, சுரேஷை உடனடியாக கைது செய்தனர். அவர் மீது அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி..! " நம் கடமை"..! முதல்வர் விஜய் உறுதி...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share