×
 

குரல்களை ஒடுக்க முடியாது! தெருக்குறள் அறிவுக்கு ஆதரவாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக ராப் பாடகர் 'தெருக்குறள்' அறிவைக் கைது செய்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குத் திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காகப் புகழ்பெற்ற ராப் பாடகர் 'தெருக்குறள்' அறிவை (Arivu) தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்யின் தலைமையிலான அரசு கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின்.

டெல்லியில் சிஜேபி அமைப்பின் தலைமையிலான மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் வெடிக்காமல் தடுக்கவே அறிவைக் கைது செய்துள்ளதாகத் தனது எக்ஸ்  பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தெருக்குறள் அறிவின் கைதைக் கண்டித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

நீட் தேர்வுக்கு எதிராகத் தைரியமாகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் என் அன்புச் சகோதரருமான 'தெருக்குறள்' அறிவைக் கைது செய்த விஜய் தலைமையிலான தமிழக அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது குரல், தமிழ்நாட்டின் குரல் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மாணவர்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் பிரதிபலிக்கும் நியாயமான குரலாகும்.

இதையும் படிங்க: #BREAKING: பாடகர் அறிவு அதிரடி ARREST..! நீட் எதிர்ப்பு போராட்டம்... வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்..!!

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகச் சிஜேபி அமைப்பினர் நடத்தி வரும் பேரணிகளும், போராட்டங்களும் நாடு முழுவதும் பெரும் எழுச்சியைப் பெற்று வருகின்றன. இந்நேரத்தில் டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடி விடுவார்களோ என்ற அச்சத்தில், தவெக அரசு அறிவைக் கைது செய்துள்ளது.

இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தவெக அரசு விடுத்துள்ள தவறான எச்சரிக்கையாகும். நீட் தேர்வு குளறுபடிகளால் நிறைந்தது மட்டுமல்ல; அது ஒரு மிகப்பெரிய மோசடியாகவும் மாறிவிட்டது. நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் நியாயமான குரல்கள் கேட்கப்பட வேண்டுமே தவிர, காவல்துறையைக் கொண்டு ஒடுக்கப்படக் கூடாது" என உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் விஜயை விமர்சித்த குற்றச்சாட்டிற்காக திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது பாடகர் 'தெருக்குறள்' அறிவும் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலிலும், கலை-இலக்கிய வட்டாரத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு பாதிப்பு... காவலர் நியமனம் ஏன் தாமதம்..? உதயநிதி ஸ்டாலின் கேள்வி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share