×
 

எவ்ளோ தைரியம் இருக்கணும்? கோவை மக்கள் கெடுத்தாங்களா? வெளுத்து வாங்கிய S.P. வேலுமணி..!

தயாநிதி மாறன் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், கோவை மக்கள் தங்கள் ஊரைத் தவிர மற்ற எல்லா ஊர்களையும் கெடுப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிய வீடியோக்கள் பரவின. தயாநிதி மாறன் பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

நம்பி வந்த யாவருக்கும் கொடுத்தது கோவை என்பதே உண்மை வரலாறு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்துள்ளார். "கோவை மக்கள் கெடுத்தார்கள்" என்று சொல்ல திரு. தயாநிதி மாறனுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார். உழைக்கும் மக்களான கோவை மக்களை, அதிகார மமதையில் இழிவாகப் பேசிய அவருக்கு வன்மையானக் கண்டனம் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

கோவை மக்களை இழிவுபடுத்துவதை ரசித்துக்கொண்டு சிரிக்கிறார் திசெந்தில் பாலாஜி என்றும் கோவை மாவட்ட மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை இதுதான் எனவும் தெரிவித்தார். தனது பேச்சுக்கு தயாநிதிமாறன், கோவை மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செஞ்சீங்களா? திமுக என்ன சாதிச்சது? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

திமுக-வின் கோவை வெறுப்பு என்பது புதிது அல்ல என்றும் கோவைக்கு திமுக எதையும் கொடுத்ததாக வரலாறு இல்லை., வருவதாக இருந்ததை எல்லாம் கெடுத்ததாக மட்டுமே வரலாறு உள்ளது எனவும் கூறினார். இந்த தீய எண்ணம் கொண்ட தீயசக்தி திமுக-விற்கு மீண்டும் ஒருமுறை தக்க தண்டனையைக் கொடுக்க கோவை மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் எஸ். பி. வேலுமணி தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: பட்ஜெட் பெயரில் காது குத்தும் விழா...! பத்திரிகை அடித்து கலாய்த்த அதிமுக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share