சி.எம். விஜயின் மாஸ்டர் பிளான்... பட்ஜெட்டில் பக்கா மாஸ் அறிவிப்பு... முக்கிய துறைக்கு டபுளாக நிதி ஒதுக்கீடு...!!
தமிழக பட்ஜெட்டில் விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன?
விளையாட்டுத்துறை சார்ந்த தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள்: "ஸ்போர்ட்ஸை எடு... டிரக்ஸை விடு" என்ற விழிப்புணர்வு செய்தியை முன்னிறுத்தி, தவறான போதைப்பழக்கங்களுக்கு மாற்றாக விளையாட்டு ஒழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை இளைஞர்களிடையே வளர்க்கும் நோக்கில், ஒருங்கிணைந்த இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்துகிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வதை இலக்காகக் கொண்டு, சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்த அரசு உறுதிபூண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய மாணவர் படை (NCC), தேசிய சேவைத் திட்டம் (NSS) உள்ளிட்ட முக்கிய இளைஞர் அமைப்புகள் மருத்துவம், காவல்துறை மற்றும் சமூக நலத்துறைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் இளைஞர்களின் ஆற்றல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் நல்வாழ்வு சார்ந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் அவர்களை வழிநடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
இதையும் படிங்க: அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!
"அனைவருக்கும் விளையாட்டு; அனைத்து இடங்களிலும் விளையாட்டு" என்ற நோக்கத்தின் அடிப்படையில், கல்வி நிறுவனங்கள் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் முழுமையாக போதைப்பொருள் இல்லாத வளாகங்களாக உருவாக்கப்படும்.
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட வீரர்களை உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ₹50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும், விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8 முதல் 12 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சிகளை வழங்குவதற்காக ₹5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் 500 விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக கூடுதலாக ₹22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கில் கொண்டு செல்லும் நோக்கில், தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக ₹42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ₹2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குதல் மற்றும் இளைஞர்களிடையே ஆரோக்கியம், உடற்தகுதி மற்றும் விளையாட்டு பண்பாட்டை வளர்த்தெடுத்தல் என்ற இரு நோக்கங்களையும் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் இந்த அரசு செயல்படுத்த உறுதிபூண்டுள்ளது.
இதையும் படிங்க: கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?