திமுக - அதிமுக கூட்டு வச்சாலும் விஜய்தான் CM!! மறுதேர்தலே சிறந்த வழி!! ஸ்ரீதர் வேம்பு அதிரடி!
ஜனாதிபதி ஆட்சியுடன் புதிய தேர்தலை நடத்துவதே சிறந்த வழியாக இருக்கலாம், என ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத சூழலில், புதிய தேர்தலே சரியான தீர்வாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது அறிக்கையில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, “ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் உருவாகும் எந்த அரசும் நீண்ட காலம் நிலைத்திருக்காது. பல்வேறு அரசியல் அழுத்தங்கள் மற்றும் இழுபறிகள் காரணமாக அந்த அரசு தொடர்ந்து சிக்கலில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி அதன் பின்னர் புதிய தேர்தலை நடத்துவது தமிழகத்திற்கு நல்ல தீர்வாக இருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மெஜாரிட்டியை நிரூபிக்க நான்தயார்!! சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன்!! விஜய் தீவிரம்!
குறிப்பாக, இந்த முறை தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள பணமில்லா தேர்தல் அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜயை பற்றியும் ஸ்ரீதர் வேம்பு முக்கியமாக பேசியுள்ளார். “மீண்டும் தேர்தல் நடந்தால் விஜய் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என்று நான் நம்புகிறேன். அதை தடுக்க திமுக மற்றும் அதிமுக ஒன்றாகச் செயல்பட வேண்டிய சூழல் கூட உருவாகலாம்” என்று அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்றும், ஒரு இடம் கூட வெல்லவில்லை என்றாலும் அது புதிய தொடக்கத்திற்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். “தமிழகத்தில் பாஜக புதிய பாதையைத் தேர்வு செய்ய வேண்டிய தருணம் இது. மக்கள் புதிதாக முடிவு செய்யட்டும்” என்ற அவரது கருத்து தற்போது அரசியல் உலகில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஆட்சி அமைக்க வராத அழைப்பு..! பதவி ஏற்பதில் சிக்கல்..!! மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்..!