தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!
ஶ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார் .
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் தொழில் வழித்தடத்தில் முக்கிய தொழிற்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொழில் வளர்ச்சி, முதலீடு ஈர்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை முன்னிறுத்தி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அமைந்தது.
முதலமைச்சர் முதலில் இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உலகத் தர கண்ணாடி வளாகத்திற்குச் சென்றார். இந்தியாவில் அந்நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி மையங்களில் ஒன்றான இங்கு அவர் உற்பத்தி நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு, நிறுவன அதிகாரிகளுடன் உரையாடினார்.
கண்ணாடி உற்பத்தி தொடர்பான செயல்பாடுகள், தொழிலாளர் நலன் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விரிவான தகவல்களை அவர் பெற்றார்.தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அருகே மம்பாக்கத்தில் உள்ள சிப்காட் திட்ட அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர், அப்பகுதியில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தொழில் வளர்ச்சி முயற்சிகளை ஆய்வு செய்தார். தொழிற்பேட்டைகளில் கிடைக்கும் வசதிகள், ஏற்கனவே இயங்கும் தொழிற்சாலைகளுக்கு ஆதரவு மற்றும் புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு விளக்கினர்.
இதையும் படிங்க: கருகிய பயிர்கள்... தவிக்கும் விவசாயிகள்..! உடனடி இழப்பீட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் EPS..!
இதையடுத்து ஒரகடத்தில் உள்ள டைம்லர் பஸ்ஸஸ் இந்தியா உற்பத்தி ஆலையை முதலமைச்சர் பார்வையிட்டார். அங்கு பேருந்து உற்பத்தி செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நிசான் ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலையிலும் ஆய்வு மேற்கொண்டார்.ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் பகுதி தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் வளாகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வாகனம், பொறியியல், உற்பத்தி மற்றும் தொடர்புடைய துறைகளில் பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன. இந்த வழித்தடம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது.
இதையும் படிங்க: தலைதூக்கும் காவிரி பிரச்சனை... அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஓங்கும் குரல்கள்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!