இந்தவாட்டி மிஸ் ஆகவே கூடாது! மு.க.ஸ்டாலின் மும்முரம்! இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக! நிர்வாகிகளுடன் ஆலோசனை!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் தொகுதி கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதுராந்தகம் தொகுதி கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். நேற்று மறுசீரமைப்புக் குழு நிர்வாகிகளுடன் ஸ்டாலின் தனியாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டசபைத் தேர்தலில் தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், பல தொகுதிகள் காலியாக உள்ளன. அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) உள்ளிட்டோரின் ராஜினாமாவால் இந்தத் தொகுதிகள் காலியாகின.
மேலும் முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பதவியை ஏற்றதால் திருச்சி கிழக்கு தொகுதியும் காலியானது. இதனால் மொத்தம் 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: "போலீஸ் காரில் தான் வரணும்"..! அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது..! திமுகவினர் சாலை மறியல்..!
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. தி.மு.க. தரப்பில் தொகுதி வாரியாக உள்ள நிலவரத்தை ஸ்டாலின் நேரடியாகப் புரிந்துகொண்டு வருகிறார். மதுராந்தகம் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் உத்திகள் வகுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதேவேளையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்த இடைத்தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடாது என அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க. ஆட்சியில் இருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளுக்கு இந்த இடைத்தேர்தல் முக்கிய சவாலாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தி.மு.க. தனது அடித்தளத்தைத் தக்கவைக்க என்னென்ன உத்திகளைப் பயன்படுத்தும் என்பதை நோக்கி அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
வரும் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டு அரசியலில் அடுத்தகட்ட மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தலைமை இப்போது மேற்கொள்ளும் ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால், இந்தக் கூட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: "கட்சியை காப்பாற்ற களமிறங்கிய எடப்பாடி"..! தோல்விக்கு என்ன காரணம்..? EPS முக்கிய ஆலோசனை..!!