×
 

தொடரும் இழுபறி! தொகுதி பங்கீட்டில் சிக்கல்..! முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு..!!

முதலமைச்சர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக அரசியலில் நீண்டகாலமாக இணைந்து பயணித்து வரும் கூட்டணி உறவைக் கொண்டுள்ளன. இந்த உறவு வெறும் தேர்தல் வசதிக்காக மட்டுமல்லாமல், சமூக நீதி, மதச்சார்பின்மை, தலித் உரிமைகள், பாஜக எதிர்ப்பு போன்ற கொள்கை அடிப்படையில் வலுப்பெற்றதாக உள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலியுறுத்தி வருகிறார்.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்று வருகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் விசிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அது 6 தொகுதிகளாகக் குறைக்கப்பட்டது. இதனால் விசிக தரப்பில் சில அதிருப்திகள் எழுந்தாலும், பாஜகவின் மதவாத அரசியலைத் தடுக்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் கூட்டணியைத் தொடர்ந்து வருகிறார்கள்.

விசிக தன்னை வெறும் இடங்களுக்காகப் பேரம் பேசும் கட்சியாகக் கருதவில்லை என திருமாவளவன் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.தற்போது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 28 தொகுதிகள், மதிமுக 4, ஐயூஎம்எல் 2, மனிதநேய மக்கள் கட்சி 2 உள்ளிட்ட சில கட்சிகளுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதையும் படிங்க: நெருக்கடி..!! சிலிண்டர் தட்டுப்பாடு... ஓட்டல்கள் சங்கம் பிரதமர், தமிழக முதல்வருக்கு கடிதம்..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து உள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது. திமுக விசிக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் திருமாவளவன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: இந்தியாவே வியந்து பார்க்கும் கனவு ஆட்சி... முதல்வர் ஸ்டாலினுக்கு டிஆர்பி ராஜா புகழாரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share