×
 

லஞ்ச் ஆர்டர் பண்ண போறீங்களா? ஒரு நிமிசம்!!! ஸ்விக்கி, சோமோட்டோ ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விகி, ஸொமேட்டோ ஊழியர்கள் இன்று (மே 16) பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விகி மற்றும் சொமேட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் இன்று (மே 16) பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் லிட்டருக்கு பெட்ரோல் ₹3.14 மற்றும் டீசல் ₹3.11 உயர்ந்துள்ளது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ள முக்கிய விலை உயர்வாகும்.

இருசக்கர வாகனங்களை நம்பி தினசரி வருமானம் ஈட்டும் டெலிவரி ஊழியர்கள் இந்த விலை உயர்வால் கடுமையான நிதி நெருக்கடியை சந்திப்பதாகக் கூறுகின்றனர். கிக் மற்றும் பிளாட்பார்ம் சேவைத் தொழிலாளர் சங்கம் (GIPSWU) வெளியிட்ட அறிக்கையில், “விலைவாசி உயர்வு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நிலையில், டெலிவரி ஊழியர்களுக்கு உரிய சலுகைகள் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது. இதனை ஏற்று ஸ்விகி, சொமேட்டோ, ஓலா உள்ளிட்ட தளங்களில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் இன்று 5 மணி நேரம் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

தொழிற்சங்கத்தினர் கூறுகையில், “நாடு முழுவதும் சுமார் 1.2 கோடி தற்காலிக டெலிவரி ஊழியர்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தினசரி 10 முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்யும் பெண் ஊழியர்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்” என எச்சரித்துள்ளனர். அதிகரித்த எரிபொருள் செலவு காரணமாக பலர் இத்தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!

நிடி ஆயோக் கணிப்பின்படி, ஆன்லைன் டெலிவரி ஊழியர்களின் எண்ணிக்கை 2020-21ல் 77 லட்சமாக இருந்தது. இது 2029-30ம் ஆண்டுக்குள் 2.3 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஊழியர்களின் நலனை பாதுகாக்க நிறுவனங்கள் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

இன்றைய வேலை நிறுத்தம் நாடு முழுவதும் உணவு டெலிவரி சேவைகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு வீட்டு உபயோகம் முதல் தொழில் வரை அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் நிலையில், இந்தப் போராட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: இதோ ஆரம்பிச்சிட்டானுங்கல்ல!! பெட்ரோல், டீசல் விலை உயர்வு!! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share