நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்! போலீஸ் ஸ்டேஷனிலேயே மிரட்டல்... களி திண்ண வைத்த போலீஸ்!
புகார் அளிக்க வந்த பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செந்தில் என்பவர் தன்னோடு பழகிவிட்டு ஆபாச படங்கள் வைத்திருப்பதாக கூறி மிரட்டுவதாகவும், தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் கூறி பெண் ஒருவர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த செந்தில், தான் வைத்திருக்கும் நிர்வாண படங்களை வெளியிடுவேன் என போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வைத்தே அந்தப் பெண்ணை மிரட்டி உள்ளார். புகார் அளிக்க வந்த பெண்ணின் கையை முறுக்கி மிரட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஐயா நான் செஞ்சது தப்புதான்... நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய ஸ்ரீகாந்த்!
போலீசார் எச்சரித்தும் அதனை கேட்காமல் மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணை துரத்தி சென்று மிரட்டியுள்ளார். இதனை எடுத்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார், மது போதையில் வந்து போலீசார் முன்பே மிரட்டல் விடுத்த செந்தில் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.4 லட்சத்துக்கு கொக்கைன்.. வசமாக சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. புழல் சிறையில் அடைத்த போலீஸ்..!