×
 

“பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

தற்போது சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பான குழந்தைகளின் காணொளிகளும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் வ.உ. சிதம்பரனார் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழக அரசியல் மற்றும் சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

முதலமைச்சர் அறிவித்துள்ள மோட்டார் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நடிகர் அஜித் பாராட்டியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் பிக் பாஸ் நிகழ்ச்சி போல இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய விமர்சனம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தொலைக்காட்சி நிகழ்ச்சியை தாழ்த்திப் பேசிவிட்டு அரசியல் நிகழ்வை உயர்த்திக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றார். சீமான் உவமைக்காக அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இப்படி தான் கடனை குறைப்பீங்களா.? எதுக்கு அறிக்கை.? எதுக்கு விவாதம்... விளாசிய சீமான்..!!

தற்போது சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பான குழந்தைகளின் காணொளிகளும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். சினிமா வசனங்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகளை ரீல்ஸ்களாக வெளியிட்டு வந்த நிலையில், தற்போது சட்டமன்றத்தில் நடைபெறும் சம்பவங்களும் ரீல்ஸ்களாக மாறி வருவதாக அவர் கூறினார்.

மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் சட்டமன்ற நிகழ்வுகளை பார்ப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம் ஒரு தலைமுறையே அரசியல் மீது கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதை வரவேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக பல்வேறு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்ததாகவும் அமைச்சர் கூறினார். பாலநிலம் சென்றபோதும் இது தொடர்பாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார். அந்த சந்திப்பு மரியாதையான முறையில் நடைபெற்றதாகவும், பின்னர் ஆதரவு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது குறித்த கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்தார். கே.என். நேரு மூத்த அரசியல்வாதி என்றும், இந்த விவகாரத்தை அவர் சட்டரீதியாக எதிர்கொள்வார் என்றும் கூறினார். மேலும், தங்கள் தலைவர் தெரிவித்த நிலைப்பாட்டின்படி, யாரையும் பாதுகாக்கும் நோக்கம் இல்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்டமன்றமா.? பிக்பாஸ் நிகழ்ச்சியா.? தற்குறி என்பதே பெரிய அங்கீகாரம் தான்.. விளாசிய சீமான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share