×
 

பிரதமர் மோடி பார்முலா! பிசறாமல் பின்பற்றும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்!!

ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு துறையும், சம்பந்தப்பட்ட துறை செயல்பாடுகள் குறித்து, 'நோட்ஸ்' அனுப்பாமல், புகைப்பட, 'ஸ்லைடு'களாக இருக்க வேண்டும் என, அனைத்து துறைகளுக்கும் தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: தமிழக அரசின் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு துறையும், தங்கள் செயல்பாடுகளை வெறும் காகிதக் குறிப்புகளாக அனுப்பாமல், புகைப்படங்கள் மற்றும் ஸ்லைடுகள் வாயிலாக முழுமையாக தயாரித்து வந்து விளக்க வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய முறை அரசு நிர்வாகத்தில் தெளிவையும், வேகத்தையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் விஜய்யின் இந்த உத்தரவு, பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு பதவியேற்ற உடனே செயல்படுத்திய மாற்றத்தை ஒத்திருப்பதாக டில்லி அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது. அப்போது மத்திய அமைச்சக அதிகாரிகள் பிரதமர் தலைமையிலான கூட்டங்களுக்கு ஏராளமான பைல்கள் மற்றும் காகிதங்களுடன் வருவது வழக்கம். அந்தக் குறிப்புகள் பெரும்பாலும் நீண்டு, வளவளப்பாக இருக்கும். இது மோடிக்குப் பிடிக்கவில்லை. 

எனவே, 2014இல் மோடி அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். எந்தத் தகவலையும் சுருக்கமாகவும், திட்டத்தின் சாதக பாதக அம்சங்களுடனும் பவர் பாயிண்ட் ஸ்லைடுகளாகத் தயாரித்து, திரையில் காட்டி விளக்க வேண்டும் என அறிவித்தார். இந்த முறை இன்றும் மத்திய அரசில் வெற்றிகரமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: இதை ஏன் இத்தன நாளா மறைச்சீங்க முதல்வர் விஜய்?! 40 நாட்களுக்கு பின் வெளிவந்த சீக்ரெட்! எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

அதே மாதிரியான அணுகுமுறையைத் தமிழக முதல்வர் விஜய் தற்போது அமல்படுத்தியுள்ளது அதிகாரிகள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகையில், “இந்தப் புதிய முறை நேரத்தை பெரிதும் மிச்சப்படுத்தும். முதல்வருக்கு அதிகாரிகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெளிவாகப் புரியும். புகைப்படங்கள் மற்றும் ஸ்லைடுகள் மூலம் திட்டங்களின் முன்னேற்றம், சவால்கள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆகியவை ஒரே பார்வையில் தெரியும்” என்றனர்.

மேலும், பாரம்பரிய காகித அடிப்படையிலான அறிக்கைகளுக்கு பதிலாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தெளிவான விளக்கம் அளிப்பது, அரசு இயந்திரத்தின் செயல்திறனை அதிகரிக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. இந்த உத்தரவு அமலுக்கு வந்தவுடன், துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள் ஸ்லைடு தயாரிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கை, தமிழக அரசு நிர்வாகத்தில் நவீன மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். காகிதங்களின் அளவைக் குறைத்து, தொழில்நுட்பத்தை அதிகரிப்பதன் மூலம் அரசு செலவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சீமான் போராடியதை முடித்துக் கொடுத்த முதல்வர் விஜய்! அரசு பஸ்களில் மீண்டும் இடம் பிடித்தது தமிழ்நாடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share