×
 

இன்னைக்கு சென்னை ஒரு வழி ஆகப்போகுது.. சுட்டெரிக்கும் வெயில்..!! வானிலை மையம் வார்னிங்..!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த இரு அல்லது மூன்று நாட்களுக்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பருவமழை வருகையை முன்னிட்டு, தமிழகத்தில் இன்று பல இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் செய்திக்குறிப்பின்படி, தெற்கு கேரளம் மற்றும் அதை ஒட்டிய தமிழகப் பகுதிகளின் மேல் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், 3.1 முதல் 7.6 கிலோமீட்டர் உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் சுழற்சி காணப்படுகிறது. கிழக்கு விதர்பாவில் இருந்து தெற்கு கேரளம் வரை, தெலுங்கானா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுவை வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நீண்டுள்ளது. இந்த வானிலை அமைப்புகளே தமிழகத்தில் மழைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்று (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்) உடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: வெயிலோட ஆட்டம் இன்னும் முடியல.. மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறதா பள்ளிகள் திறப்பு..??

சென்னை வானிலை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும். இதனால் சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று தமிழகத்தில் 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. வேலூர் 104.9° பாரன்ஹீட் (40.5°செ.), சென்னை மீனம்பாக்கம் 104.18° (40.1°செ.), திருத்தணி 103.1°, சென்னை நுங்கம்பாக்கம் 102.2°, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வெப்பம் பதிவானது.

வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை பெய்யும் பகுதிகளில் மின்னல் தாக்குதல், மரங்கள் முறிவு, சாலை வெள்ளம் போன்ற அபாயங்கள் உள்ளன. மீனவர்கள் மற்றும் விவசாயிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பருவமழை தொடங்குவதால் வெப்பத்திலிருந்து சற்று நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தெலுங்கானாவில் கொடிய வெப்ப அலை: 16 பேர் உயிரிழப்பு..!! அரசு இழப்பீடு அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share