×
 

நலம் காக்கும் ஸ்டாலின் வெற்று விளம்பரமா? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க! சுகாதாரத்துறை ரிப்போர்ட்..!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் இதுவரை 4 லட்சத்து 44 ஆயிரத்து 18 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு, மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், மக்களின் உடல்நலனை பாதுகாக்கவும், இலவச மருத்துவ சேவைகளை அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்யவும் வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய திட்டமாக “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் உருவாகியுள்ளது.

இத்திட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் மற்றொரு மைல்கல்லாக அமைகிறது. 

நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம், மக்களுக்கு பல வழிகளில் பயனளிக்கிறது. முதன்மையாக, இலவச மருத்துவ பரிசோதனைகள் மூலம் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடிகிறது.

இதையும் படிங்க: அடேங்கப்பா… இது நம்ப லிஸ்டிலேயே இல்லையே! திமுகவுக்கு தாவும் ஜெயக்குமார்? அரசியலில் பரபரப்பு

இது, சிகிச்சை செலவுகளைக் குறைப்பதோடு, உயிரிழப்புகளையும் தடுக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதால், அவர்கள் அரசின் பிற நலத்திட்டங்களைப் பெறுவது எளிதாகிறது. முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைவதற்கு வழிவகை செய்யப்படுவதால், மருத்துவ செலவுகளுக்கு நிதி உதவி கிடைக்கிறது.

மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் அனைவருக்கும் மருத்துவ சேவைகள் அருகாமையில் கிடைப்பது, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 1256 முகாம்கள் நடத்தப்படும் எனவும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் முகங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கி வைத்த நிலையில் இதுவரை, 4 லட்சத்து 44 ஆயிரத்து 18 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 2,935 பேர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், விழுப்புரத்தில் 2,013 பேர், கோவையில் 1,385 பேர், திருவண்ணாமலையில் 1,360 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் நடப்பது இனப்படுகொலை! இலங்கையை ஒப்பிட்டு சீமான் பகிரங்க குற்றச்சாட்டு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share