×
 

கல்லூரிக்கே கட்டிடம் இல்ல... எய்ம்ஸ் பத்திலாம் பேசலாமா?நக்கலடித்த தமிழிசை

கட்டடமே இல்லாமல் கரூர் வேளாண் கல்லூரி இயங்கும் லட்சணத்தில் மதுரை எய்ம்ஸ் பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை உண்டா என தமிழிசை கேள்வி எழுப்பினார்.

கரூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்பது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்தக் கல்லூரி 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் காணொளி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

இரண்டாம் பசுமைப் புரட்சியை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தவும், நவீன வேளாண் தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கற்பிக்கவும் இந்நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வேளாண் கல்லூரி தற்காலிகமாக திருமண மண்டபம் ஒன்றில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: கரூரில் காலையிலேயே பரபரப்பு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...! 

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். மதுரைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிடவில்லை என்றும் கற்பனை வீடியோவை வெளியிடவே 10 வருடங்கள் ஆனதாக விமர்சித்தார்.

இந்த நிலையில் கரூர் வேளாண் கல்லூரி 4 ஆண்டுகளாக கட்டடமே இல்லாமல் திருமண மண்டபத்தில் நடந்து வருவதாக தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

4 ஆண்டுகளாக கட்டிடமே இல்லாத கல்யாண மண்டபத்தில் கரூர் விவசாய கல்லூரி நடக்கும் இந்த லட்சணத்தில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி கட்டிடம் கட்ட தாமதம் ஆவதை விமர்சிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை உண்டா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், திமுக அரசை தோல்வியடைந்த திராவிட மாடல் என்றும் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: மாப்பிள்ளை அவர்தான், போட்டிருக்க சட்டை என்னோடது... அமித் ஷாவை லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share