என்ன பேச்சு இதெல்லாம்..? அமைச்சர் நிர்மல் குமார் கருத்து..! போர்க்கொடி தூக்கிய தமிழிசை..!!
அமைச்சர் நிர்மல் குமார் பேசியது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பேட்டி கொடுத்த தமிழக மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் உரிமையை நிலைநாட்டுவதற்கு போராடுவதை ஏதோ அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை போல உருவகப்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நிலைமை இருந்ததோ அதைத்தான் கடைப்பிடிப்போம் என்று சொல்கிறாரே என்றும் ஏன் மாற்றம் வேண்டும் என்று கேட்கிறாரே அப்படி என்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் என்ன நிலைமை இருந்ததோ அந்த நிலைமை இருக்கட்டும் என்றால் நீங்கள் எல்லாம் எப்படி வந்தீர்கள் ஏன் வந்தீர்கள் என்று தமிழக மக்கள் கேட்கலாமா எனவும் கேட்டுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால் தான் முந்தைய அரசு புறந்தள்ளப்பட்டது என்று கூறியுள்ள அவர், ஏதோ நீங்கள் எல்லாம் அவசர காலத்தில் அடித்த விசில் சத்தத்தில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்றார். அதனால் உரிமைக்காக போராடும் மக்களின் உரத்த குரல் உங்கள் காதில் விழாது என்றும் காட்டமாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அமைச்சரின் பேட்டி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையோ வழக்கத்தையும் மதித்ததாக தெரியவில்லை என்றும் கூறினார்.
அதுமட்டுமல்ல மக்களுக்கு வேண்டியவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் நடக்கும் பொழுது எல்லா தலைவர்களும் பேட்டி கொடுக்கும் முறையை கையாளுகிறார்கள்., ஆனால் அந்த முறையையும் மின்சார அமைச்சர் கொச்சைப்படுத்துகிறார் எனவும் தெரிவித்தார் . முதலில் பத்திரிகையாளர்கள் இதற்கு எதிர்ப்பு கேள்வி கேட்டிருக்க வேண்டும் என்றும் தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்கே பலர் பத்திரிகையை சந்திப்புகளை சந்திக்கிறார் என்று பத்திரிகையாளர்களை மதித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துபவர்களை இவர் கொச்சைப்படுத்துகிறாரா எனவும் கேட்டார்.
இதையும் படிங்க: புறவாசல் வழியாக வந்த காங்கிரஸ்..! PM SHRI திட்டத்தை ஏற்கணும்... தமிழிசை விமர்சனம்.!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடுக்கும் எண்ணத்தை விட முதலில் தமிழகத்தின் நிலவும் மின்வட்டையும் அந்த துறையில் உள்ள முறைகேடுகள்கேடுகளையும் களைவதில் அமைச்சர் அக்கறை செலுத்தினால் நலமாக இருக்கும் என்றும் விளக்கேற்றுவோம் ஒளி வேண்டும் என்கிறார்கள் மக்கள்., மின்வெட்டு ஏற்படுத்தி தமிழகத்தை இருட்டாக்குவோம் என்கிறார் அமைச்சர் எனவும் தமிழிசை சாடினார்.
இதையும் படிங்க: பாஜகவின் அடுத்து விக்கெட்.! A.G. சம்பத் கட்சியில் இருந்து விலகல்..! முக்கிய அறிவிப்பு..!!