×
 

யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

யாருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்கு அழைப்பது பற்றி நாங்கள் யாரும் கேட்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்க கூடிய ஒரு சம்பவமாக விளாத்திகுளத்தில் பாலியல் பலாத்காரம் சம்பவம் நடைபெற்றுள்ளது என்றார்.

இது மட்டுமல்ல தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை கண்டிப்பதற்காகவும் பெண்ணினத்தை பாதுகாப்பு கொடுப்பதற்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை சொல்வதற்காக நான் வந்துள்ளேன் என்று கூறினார். நேற்று இஸ்லாமிய நோன்பில் கலந்து கொண்ட போது தமிழின் அடையாளத்தை நாம் எல்லாம் சேர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறார்., தெலுங்கானா மாநிலத்திலும் இப்தர் நோன்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது என்று பாஜக மதச்சார்பின்மை உடன் செயல்பட்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

பாஜக வந்துவிட்டால் மதச்சார்பு வந்துவிடும் என்று கூறுகின்றனர்., இந்து மதத்தை பேசுகின்ற போது சனாதன தர்மத்தை கொசு போன்று ஒழிப்பேன் என்று கூறுகிறார் எனக் கூறிய தமிழிசை சௌந்தர்ராஜன், பாகுபாடின்றி எல்லோருக்கும் வாழ்த்து தெரிவிப்பது தான் தமிழின் அடையாளம். வந்தாரை வரவேற்கும் தமிழகம் அடையாளம் ஆனால், பிரதமர் வந்தால் கூட வரவேற்பதில்லை என்று தெரிவித்தார். தமிழின் அடையாளம் ஒரு இடத்தில் ஒருவர் துன்பப்பட்டு கொண்டிருக்கும் போது அங்கு ஓடோடி செல்வதை விட்டுவிட்டு தமிழக முதலமைச்சர் அதைப்பற்றி கவலைப்படாமல் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: "ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்" ..? சீரியல் முடிஞ்சுது..!! தமிழிசை தாக்கு..!!

தமிழக வெற்றி கழகத்தை பாஜக கூட்டணியில் இணைப்பதற்கு நாங்கள் யாருக்கும் அனுப்பவில்லை என்றும் அதிமுக பாஜக இயல்பாக கூட்டணி அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார். எங்களை பொறுத்த மட்டில் யாருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியது இல்லை என்றும் இந்த கூட்டணியில் திமுகவை யாரெல்லாம் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களை கூட்டணியில் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம்., அதிமுக பாஜக கூட்டணி பலமாக இருக்கிறது என்றும் மோசமான ஆட்சி நடத்துகின்ற திமுக இயற்கை தோல்வி பயம் வந்துவிட்டது எனக் கூறினார். ஒவ்வொரு முறை வரும்போது பிரதமர் மோடி, அரசாங்கத்தின் சார்பில் தமிழகத்தில் நல்ல திட்டங்களை சமர்ப்பிக்க தான் வந்துள்ளார் என்று கூறினார்.

இதையும் படிங்க: “முழ்குற கப்பலின் கேப்டன்... விஜயகாந்த் கட்சிக்கு இப்படியொரு நிலையா?...” - தேமுதிகவை சீண்டிய தமிழிசை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share