×
 

அமைச்சர்கள் சுருட்டுன பணத்துல பல பட்ஜெட் போடலாம்.. இன்னும் 10 மாசம் தான்; தமிழிசை கவுண்டவுன்..!

திமுக ஆட்சியில் ஏறக்குறைய 500 வாக்குறுதிகள் கொடுத்தவர்கள் முக்கியமான வாக்குறுதிகள் கூட நிறைவேற்ற வில்லை உபரி மின்சாரம் இருக்கிறது என்று சொல்கிறார்கள் மின்தடை அதிகரித்துள்ளது என தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு பகுதியில் உள்ள அத்தி இயற்கை யோகா மற்றும் செவிலியர் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழகத்தில் வருங்காலம் மாற்றம் ஏற்பட வேண்டும் 2026 தமிழக மக்கள் முழுமையாக பலன் பெற வேண்டும் என்றார். 

இன்றைய ஆட்சியில் ஏறக்குறைய 500 வாக்குறுதிகள் கொடுத்தவர்கள் முக்கியமான வாக்குறுதிகள் கூட நிறைவேற்ற வில்லை. உபரி மின்சாரம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு எனது வீட்டிலேயே மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லை. மின்தடை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. ஆள் பற்றாக்குறை நிதி பற்றாக்குறை எனக் கூறி வருகிறார்கள் ஒரு வெளிச்சத்தை கூட வசதியைக் கூட காற்றைக் கூட குளிர்ச்சியை கூட முழுமையாக கொடுக்க முடியாத அரசாங்கமாக தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. 

இதையும் படிங்க: துணை வேந்தர்கள் தடுக்கப்பட்டார்களா? ஆளுநர் சும்மா சொல்லவில்லை.. கொந்தளித்த தமிழிசை..!

தீவிரவாதிகள் எதிராக நாடு எப்படி இருக்க வேண்டும் என்பது உலக நாடுகளுக்கு உதாரணமாக இந்தியா உள்ளது ஜனநாயக முறைப்படி  சாமானிய மக்கள் பாதிக்காமல் சாமானிய மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் தீவிரவாதத்தை ஒழிக்கும் பணியில் முன்னோடியாக பிரதமர் மோடி திகழ்கிறார். இப்படிப்பட்ட ஒரு பிரதமரை தமிழகத்தில் விமர்சனம் செய்பவர்கள் தமிழகத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் திட்டம்  முறையாக பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை. எந்த திட்டமும் முழுமையாக செயல்படுத்தப் படவில்லை. ஒவ்வொரு துறை அமைச்சரிடமும் துறைகள் பிடுங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அமைச்சரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இன்னும் பத்து மாதங்கள் உள்ளது ஒவ்வொரு அமைச்சரின் பிரச்சினையை தீர்ப்பதற்கு பத்து மாதங்கள் சரியாக விடும்.

அமைச்சர்கள் சுருட்டிய பணத்தில் பல பட்ஜெட் போடலாம் மோடி அரசாங்கத்தில் உள்ள ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை ஊழல் இல்லாமல் ராணுவ தடைவாளங்கள் வாங்கப்பட்டதால், இன்று நாம் எதிரியை பலமாக வீழ்த்தி வருகிறோம் என டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.

இதையும் படிங்க: சேலத்தில் முதிய தம்பதி படுகொலை.. தொடர் கொலைகளால் நடுங்கும் கொங்கு மக்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share